சென்னை : தமிழகத்தில் நேற்று, மூன்றாவது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இருப்பினும், சில தினங்களாக, விலை உயர்த்தப்படாமல் உள்ளது.தமிழகத்தில், இம்மாதம், 8ம் தேதி, லிட்டர்பெட்ரோல், 89.39 ரூபாய்க்கும், டீசல், 82.33 ரூபாய்க்கும் விற்பனையாயின. பின், அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.சனிக்கிழமை, லிட்டர் பெட்ரோல், 92.59 ரூபாய்; டீசல், 85.98 ரூபாய்க்கு விற்பனையானது. மூன்று நாட்களாக, பெட்ரோல், டீசல் விலை, மாற்றம் செய்யப்படவில்லை. அவை, நேற்றும் அதே விலைக்கு விற்பனையாயின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE