சென்னை : 'தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:கேரளாவின் வடக்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய கடலோர பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.வட மாவட்டங்களில், லேசான மழை பெய்யலாம். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல், 26ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE