கோவை:கோவில் யானைகளைப் போல், கும்கி யானைகளுக்கும் விரைவில் நலவாழ்வு முகாம் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில், யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தற்போது நடந்து வருகிறது. முகாமில் தமிழகம், புதுச்சேரி கோவில்கள் மற்றும் திருமடங்களில் இருந்து, 26 யானைகள் பங்கேற்றுள்ளன. கோவில் யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடந்து வரும் நிலையில், கும்கி மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் குறித்த அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை. விரைவில் கும்கி யானைகளுக்கும், நலவாழ்வு முகாமை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வழக்கமாக கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவடைந்த பின்னரே கும்கி, வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கும். வரும் மார்ச், 23ம் தேதி வரை இம்முகாம் நடக்க உள்ளது. அதனால், கும்கி, வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE