கோவை:காந்திபுரம்- மருதமலைக்கு, அரசு டவுன் பஸ், சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில் சென்று கொண்டிருந்தது. பைக்கில் குடிபோதையில் வந்த இருவர், பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, ஏற்பட்ட தகராறில், பின் பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். பஸ் நடத்துனர் ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், கே.கே.புதுார் நான்காவது வீதியை சேர்ந்த கார்த்திக்,20, சதாம் உசேன், 24, ஆகியோர் மீது, பொது சொத்துக்களை சேதப் படுத்துதல் சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிந்து கடந்த 10ம் தேதி கைது செய்தனர். இவர்களை ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி, இருவரது ஜாமின்மனுவை, டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE