மூணாறு : கேரளா மூணாறு அருகே பள்ளிவாசல் பவர்ஹவுஸ்சில் பிளஸ் -2 மாணவி ரேஷ்மா 17, கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் உறவினர் அருண் 28, நண்பர்களுக்கு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ராஜகுமாரியில் வாடகை அறையில் தங்கி அருண் தச்சு வேலை செய்தார். ரேஷ்மா தங்கை முறை என்றாலும் இருவரும் காதலித்தனர். ரேஷ்மா கொலைக்கு பிறகு வெள்ளத்துாவல் போலீசார் அருண் அறையில் சோதனையிட்டனர். நண்பர்களுக்கு எழுதிய 10 பக்க கடிதம் சிக்கியது.அதில் ''என்னை காதலித்த ரேஷ்மா வேறு ஒருவரை காதலிப்பதால் சமீபகாலமாக விலகி செல்கிறார். ரேஷ்மாவை காலி செய்துவிட்டு நானும் காணாமல் போய் விடுவேன்'' என குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
பள்ளி மூடல்: கொலையான ரேஷ்மாவுக்கு அடிமாலி தாலுகா மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனால் சுகாதாரத்துறை உத்தரவில் அவர் படித்த பைசன்வாலி அரசு மேல்நிலை பள்ளியை 4 நாட்கள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE