அன்னூர்:கஞ்சப்பள்ளி ஊராட்சியில், கடந்த இரு மாதங்களாக குடிநீர் சரியாக வினி யோகிக்கப்படவில்லை. ஆவேசமடைந்த ஊத்துப்பாளையம் மக்கள், நேற்று காலை அன்னூர், அவிநாசி ரோட்டில், ஊத்துப்பாளையத்தில், காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அங்கு சென்ற மண்டல துணை தாசில்தார் நித்திலவல்லி மற்றும் போலீசாரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். வருவாய் துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, '10 நாட்களுக்குள் துண்டிக்கப்பட்ட பகுதியில், பொது குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்.பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அன்னூர் - அவிநாசி சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE