கோவை:ராம்நகரில் ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமருக்கு, நாளை ஜீர்ணோதாரண மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.கோவை ராம்நகரில், 90 ஆண்டுகள் பழமையான கோதண்டராம சுவாமி தேவஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ வில்வலிங்கேஸ்வரர் மற்றும் நவகிரஹ சன்னதிகளுக்கு, ஜீர்ணோதாரண மஹா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.அதன் படி, நேற்று முன் தினம் காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன், ஒன்பது கலச திருமஞ்சனம், வேதபாராயணம், பிரபந்த பாராயணம், சாந்தி ஹோமம் நிவேதனம், முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. பகல் 3:00 மணிக்கு, கோபுர கலசங்கள், விமான கலசங்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.இன்று காலை 8:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், பகல் 2:30 மணிக்கு சப்த தச கலசம் (17 கலசங்கள்) திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், இரவு 8:30 மணிக்கு மஹா சயனாதிவாசமும் நடைபெறுகிறது.நாளை காலை 4:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 5:00 மகா பூர்ணாஹூதி, 5:30 மணிக்கு பூர்ணகும்பம் புறப்படுதல், காலை 6:00 மணியிலிருந்து 7:30க்குள் அனைத்து சன்னதி மூர்த்திகளுக்கும், ராஜகோபுர விமான கலசங்களுக்கு ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மாலை 5:00 மணிக்கு பெருமாள் வீதி உலா, புஷ்ப அலங்காரம், நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜையும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாட்டிய நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெறும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE