கோவை:பணி நிரந்தரம் செய்ய மறுப்பதாக கூறி, ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை, ஒப்படைக்க வந்த மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை, கலெக்டர் திருப்பி அனுப்பினார்.தமிழக மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். 10 முதல் 20 ஆண்டுகளாக வேலை பார்க்கும் தங்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்பது, இவர்களது கோரிக்கை.'தானே புயல், கஜா புயல் பாதித்த காலங்களில், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்று அரசு தரப்பில் உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் புயல் பாதிப்பு சரியானவுடன், அந்த உறுதி நிறைவேற்றப்படவில்லை.அதிருப்தியில் இருக்கும் தொழிலாளர்கள், தங்களது ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க, கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு, அடையாள ஆவணங்களையும் ஒப்படைத்தனர். 'அவற்றை ஏற்க மறுத்த கலெக்டர் ராஜாமணி, 'உங்களது கோரிக்கை குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்' என்று கூறி, திருப்பி அனுப்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE