கோவில்பாளையம்:கீரணத்தம், கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மயில்சாமி, 37; விவசாய தொழிலாளி. இவர் கடந்த, 14ம் தேதி இரவு, உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்று விட்டு, மோட்டார் பைக்கில் வீடு திரும்பும்போது, வீட்டுக்கு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் 3:00 மணிக்கு இறந்தார். கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE