பல்லடம்:பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் புதிய கல்குவாரி, கிரஷர் நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான கருத்து கேட்பு கூட்டம், கடந்த 17ம் தேதி, காரணம்பேட்டையில் நடந்தது. கூட்டம் குறித்த தகவல் தரப்படவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், பல்லடம் பி.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில், ''கல்குவாரி, கிரஷர் நிறுவனங்களால் ஏராளமான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். தினசரி இங்கு வந்து செல்லும் ஐநுாறுக்கும் மேற்பட்ட லாரிகள், ஜல்லி கற்கள், துகள்கள், எம் சாண்ட் ஆகியவற்றை ரோட்டில் சிதற விட்டு செல்கின்றன.கிராமம் முழுதும் மண் புழுதி ஏற்பட்டு, விவசாய தொழில் பாதிக்கப்படுவதுடன், வாழத் தகுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முறைகேடாக இயங்கும் கல்குவாரி, கிரஷர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், மேலும் கூடுதலாக கல்குவாரிகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.இதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்து, புதிய கூட்டத்தை கோடங்கிபாளையம் கிராமத்தில் நடத்த வேண்டும்'' என்றனர்.பொதுமக்களிடம் மனுவை பெற்றபி.டி.ஓ.,க் கள் கந்தசாமி, குருவம்மாள் ஆகியோர், நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE