திருப்பூர்:அவிநாசி - அத்திக்கடவு போராட்ட குழு நிர்வாகிகள், சம்பத்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்ற கோரி, கடந்த 2016ல் துவங்கிய உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக, அப்போதைய முதல்வர் ஜெ., இதற்கான பணியை துவங்க உத்தரவிட்டார்.அதன் பின் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு பணியை துவக்கியுள்ளது. திட்டத்தை துவங்கிய மாநில அரசுக்கும், போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தொரவலுார் ஊராட்சியில், திட்டத்தில் இணைக்க கோரிக்கை விடுக்கப்பட்ட குளங்களை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.இப்பணிகள் குறித்தும், திட்டத்தின் தற்போதைய நிலை, மேலும் இணைக்க வேண்டிய குளம், குட்டைகள் இருப்பின் அவை குறித்தும் ஆலோசனை நடத்தும் வகையில் வரும், 28 ம் தேதி, தொரவலுார் அண்ணமார் கோவில் மண்டபத்தில், மாலை 5:00 மணிக்கு அவிநாசி - அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE