திருப்பூர்:அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திருப்பூர் மாவட்டம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், காத்திருப்பு போராட்டத்தை நேற்று காலை துவக்கினர்.மாநில துணை தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார்; மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கடந்த, 38 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெ., அங்கன்வாடி ஊழியர்களை, ஏழாவது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என்று உறுதிமொழி அளித்தார். ஆனால், அ.தி.மு.க., அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவில் அலுவலக வளாகத்திலேயே தக்காளி சாதம் சமைத்து சாப்பிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE