கோவை:பிப்., 25ல் கோவை வரும் பிரதமர் மோடி, தேசிய அளவிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம், நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.தொடர்ந்து, கொடிசியா அருகே மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட அரசியல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.பிரதமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளில், அனைத்து துறையினரும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE