புதுக்கோட்டை : முதல்வர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்து, மதிய உணவு சாப்பிட்ட, 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்துாரில், நேற்று முன்தினம் காலை, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார். விழாவில் பங்கேற்க, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, பொதுமக்களை, அந்தந்த பகுதி அ.தி.மு.க.,வினர், வாகனங்களில் அழைத்து வந்தனர்.இலுப்பூர் அருகே சிறுநல்லுார், ஆச்சநாயக்கன்பட்டி கிராமங்களில் இருந்து, 425 பேர் அழைத்து வரப்பட்டனர். அ.தி.மு.க., நிர்வாகிகள்சார்பில், பொதுமக்களுக்கு, மதிய உணவு பார்சல் வழங்கப்பட்டது. இதில் புளிசாதம், முட்டை, ஊறுகாய், தண்ணீர் பாட்டில் கொடுத்தனர்.
இதை சாப்பிட்ட சிலருக்கு, நேற்று முன்தினம் இரவு ஒவ்வாமை ஏற்பட்டு, 30 பேர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர்போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE