பாகூர்; பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.ஆசிரியர் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், ஆசிரியை மஞ்சளழகி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் அகஸ்டின் தலைமை தாங்கினார். விளையாட்டுத்துறை முன்னாள் துணை இயக்குனர் விஸ்வநாதன் பங்கேற்று, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்தார்.தன்னார்வலர் கணபதி, விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவனர் முத்துலிங்கம், முதுநிலை எழுத்தர் யோகேஷ் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் அருளரசன் தொகுப்புரையாற்றினர். ஏற்பாடுகளை விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவனர் முத்துலிங்கம், ஆசிரியர்கள் லோகேஸ்வரி, கலியமூர்த்தி, பிரபாவதி, வாசுகி, ஜென்னி செய்திருந்தனர். தமிழ் விரிவுரையாளர் ராஜசேகரி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE