புதுச்சேரி; புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து குறித்து கருத்தரங்கம் நடந்தது.சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் புதுச்சேரிக்கு முழுமையான தனி மாநிலத் தகுதி உடனே தேவை என்ற தலைப்பில் ஜூம் செயலி வழியாக கல்வியாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. பேராசிரியர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.பேராசிரியர்கள் ராஜன், வேல்முருகன், ஆசிரியர் சுகுமார், கவிஞர் செல்வம், சண்முக கார்த்திக், சரஸ்வதி, பைரவி, ஜெகதீசன், கவுசல்யாதேவி உட்பட பலர் பங்கேற்றனர். தனி மாநில அந்தஸ்து குறித்து மாநில மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. எம்.பிக்கள் மூலம் பார்லிமெண்ட்டில் பிரதமர், உள்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE