புதுச்சேரி; காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தமிழ்த் துறை, புதுச்சேரி துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை சார்பில் உலக தாய்மொழி தினவிழா கொண்டாடப்பட்டது.பேராசிரியர் இளங்கோவன் வரவேற்றார். புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் நிர்மலா நோக்கவுரையாற்றினார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் செல்வராசு முன்னிலை வகித்தார். சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமுருகன், சத்யா சிறப்புப் பள்ளி நிறுவனர் சித்ரா அமித்ஷா சிறப்புரையாற்றினர். துளிர் அறக்கட்டளை சவிதா பத்ரிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE