புதுச்சேரி ;திருபுவனை, ஊசுடு தொகுதிகளில் போட்டியிட வடக்கு தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி மனுதாக்கல் செய்துள்ளார்.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.திருபுவனை மற்றும் ஊசுடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட புதுச்சேரி வடக்கு மாநில தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலையில் மனு தாக்கல் செய்தார்.திருபுவனை தொகுதி செயலாளர் செல்வ பார்த்திபன், வடக்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் காந்தி, மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் கோபதி, தொழிலதிபர் ஜெயசீலன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE