கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, பைக் மோதி, மூதாட்டி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் ராமாயி, 60; இவர், நேற்று காலை மகன் இளங்கோவனின் குழந்தைக்கு காது குத்தும் விழாவுக்காக, நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு, குறுக்கு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற பைக், ராமாயி மீது மோதியது. அதில் படுகாயமடைந்த ராமாயி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய பைக் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE