குளித்தலை: நடுவதியம், வாத்தலைஅம்மன் கோவில் அருகில், திருட்டுத்தனமாக வேன், மொபெட்டில் மணல் கடத்தல் மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., நடுவதியம் வாத்தலை அம்மன் கோவில் அருகில், நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணியளலில், கீழ குட்டப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், 41, கண்டியூர் ஹரிஷ், நடுவதியம் ஐயப்பன் ஆகியோர், காவிரியாற்றில் இருந்து, 35 மூட்டை மணல் கடத்தி, சரக்கு வேன், மொபட்டில் ஏற்றும் போது குளித்தலை போலீசார் விரட்டி சென்றனர். அதில் செல்வராஜ் 41, கைது செய்யப்பட்டார். மற்ற இருவர் தப்பி விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE