புதுடில்லி: 'டூல்கிட்' வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு ஜாமின் வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் வெளியிட்ட, டூல்கிட் எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, சர்ச்சையை ஏற்படுத்தியது.
நம் நாட்டில் வன்முறையை துாண்டும் வகையிலான அந்த டூல்கிட்டை, காலிஸ்தான் அமைப்பு உதவியுடன் உருவாக்கியதாக கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, 21, கைது செய்யப் பட்டார். இதையடுத்து, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஜாமின் கோரி, திஷா முறையிட்டார். அந்த மனு, நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இன்று(பிப்.,23) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, திஷா ரவிக்கு , ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தலா இரண்டு பிணை உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE