காத்மாண்டு: நேபாளம் பார்லி. கலைப்பு செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கூட்டணி ஆட்சி
அண்டை நாடான நேபாளத்தில் 2018ல், சர்மா ஒலி தலைமையிலான, சி.பி.என்.யு.எம்.எல்., உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி உருவாக்கப்பட்டது. பிரதமராக சர்மா ஒலி பதவியேற்றார். கட்சியின் தலைவராக சர்மா ஒலியும், துணைத் தலைவராக பிரசந்தாவும் பதவி வகித்து வந்தனர். இருப்பினும், அவர்கள் இரு அணிகளாகவே செயல்பட்டு வந்தனர்.
![]()
|
பார்லிமென்ட் கலைப்பு
கடந்தாண்டு டிசம்பரில், பிரதமர் சர்மாஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பார்லிமென்டை முன்கூட்டியே கலைக்க, அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து பார்லி.,யை உடனடியாக கலைத்து கடந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.
பரபரப்பு தீர்ப்பு
பார்லி. கலைத்ததை எதிர்த்து, எம்.பி.க்கள் மற்றும் சிலர் நேபாள உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்தனர். அனைத்து மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இன்று நடந்த விசாரணையில் பார்லிமென்டை கலைத்தது செல்லாது எனவும் 13 நாட்களுக்குள் மீண்டும் பார்லி.யை கூட்ட வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE