லக்னோ: உ.பி.யில் பானிபூரி வியாபாரிகள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியது. இதில் உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவூர் என்ற இடம் பொதுமக்கள் கூடும் வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியாகும். இங்கு ஏராளமான பானிப்பூரி ,மசால் பூரி கடைகள் உள்ளன. நேற்று வாடிக்கையாளர்களை போட்டிப் போட்டு கொண்டு அழைப்பதில் வியாபாரிகளிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வியாபாரிகளிடையே வாய் தகராறு
![]()
|
வாய் தகராறு முற்றியநிலையில்,இரு தரப்பினரும் உருட்டுக் கட்டை, இரும்பு பைப்பு, இரும்பு கம்பிகளால் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர்.
இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் இதனை பகிர்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE