சண்டிகர்: ஹரியானா மாநில பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
![]()
|
இது குறித்து மாநிலமுன்னாள் முதல்வர் பூபேந்தர்சிங் ஹோடா கூறியது: நடக்கவுள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் அப்போது வேளாண் உற்பத்தி சந்தை குழு(ஏ.பி.எம்.சி) சட்டத்தில் திருத்தம் செய்வது, மற்றும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி)யை உறுதி செய்ய கோரும் தனி நபர் மசோதாவை காங். கொண்டு வரும்.
அரசு தீர்வு காண வேண்டும்
மாநிலத்தில் ஆளும் பா.ஜ., அரசு எந்த ஒரு வேலையையும் செய்ய வில்லை.மோசடிகள் மட்டுமே நடக்கின்றன. வேலையின்மை அதிகரித்து வருகிறது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு அரசு ஒரு தீர்வை காண வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதில் அரசு கால தாமதம் செய்யக்கூடாது.
![]()
|
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement