கோவை:கேரளாவில், பள்ளி மாணவி கொலையில் தொடர்புடைய நபரை, கோவையில் போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், வெள்ளதுாவல் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
மாணவியின் உறவினர்களும், போலீசாருடன் சேர்ந்து தீவிரமாக தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே, முட்புதரில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சம்பவ இடத்தில் சோதனையிட்டபோது, ஒரு மொபைல் போன் கிடைத்தது. அது, அவரது உறவினரான அருண் என்பவரின் போன் என தெரிந்தது.
மேலும், அங்குள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, மாணவியுடன் அருண் நடந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அருண், கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், கோவையில் கேரள போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE