திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை உடனடியாக தொடங்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராமப்புற மாணவிகளும் இதில் அடக்கம். எனவே தனியாக பெண்களுக்கு என அரசு உயர்நிலைப் பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.இதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணத் தொகையாக செலுத்தியுள்ளனர்.
இப்பகுதி பெற்றோர்களின் 10 ஆண்டுகால கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE