கள்ளக்குறிச்சி : விளம்பாரில் எலி பேஸ்ட் சாப்பிட்ட டிப்ளமோ பட்டதாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தை சேர்ந்தவர் நாச்சி மகன் சங்கர்,23; டிப்ளமோ பட்டதாரியான சங்கர், கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்தவாறு வேலை செய்துள்ளார். கடந்த 17 ம் தேதி இரவு 8 மணியளவில், விளம்பார் ஏரிக்கரைக்கு சென்ற சங்கர், எலிபேஸ்ட் சாப்பிட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த அவரது பெற்றோர்கள், சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று மதியம் இறந்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE