விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நாளை பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு அலங்கரித்த தனித்தனி வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா வந்து அருள் பாலிக்கின்றனர்.முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, நாளை மாசிமக தேரோட்டம் நடக்கிறது.
இதற்காக, அதிகாலை 4:30 மணியளவில், தேரடியில் சிறப்பு பூஜைகள் முடித்து, ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் அருள் பாலிக்கின்றனர். நாளை மறுநாள் மாசிமகம், அன்று மாலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE