பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம், கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியன சார்பில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சின்னப்பொன்னு மாணிக்கம், துணை தலைவர் சுகன்யா மோகன், கடலுார் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் அகிலா முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பு வரவேற்றார். அங்கன்வாடி பணியாளர் கனகராணி, முகாம் ஒங்கிணைப்பாளர் டோம்னிக் சேவியோ உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், கண் மருத்துவர் கேசவன், நல்லுார் வட்டார கண் மருத்துவ உதவியாளர் சுமதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொது மக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE