வேப்பூர் : 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் பழனிசாமி முதல்வர் ஆவார்' என ஆவின் சேர்மன் பச்சமுத்து பேசினார்.நல்லுார் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், வேப்பூரில் நடந்தது.
முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் காந்தி தலைமை தாங்கினார். அ.தி.மு.க., மருத்துவரணி மாவட்ட பொருளாளர் சம்பத், நல்லூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் தங்கராசன், மாவட்ட பிரதிநிதிகள் அருள்தாஸ், பழனிசாமி முன்னிலை வகித்தனர்.ஆவின் சேர்மன் பச்சமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆறுமுகம், டென்சிங், தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலர் மாதேஸ்வரன், கிளை செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, விருத்தாசலம் தொகுதியில், அ.தி.மு.க., மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் போட்டியிடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஆவின் சேர்மன் பச்சமுத்து பேசுகையில், 'முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். ஹைடெக் நிறுவனத்தின் கைப்பாவையாக செயல்பாடும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். விருத்தாசலம் மாவட்டத்தை முதல்வர் பழனிசாமியால் மட்டுமே உருவாக்க முடியும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் பழனிசாமி முதல்வர் ஆவார்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE