வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.81 கோடியைத் தாண்டியது.
முதல், இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் என, மூன்று போர்களில் ஒட்டுமொத்தமாக இறந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கையை விட, இது அதிகம்.
![]() |
இணைந்து செயல்படுவோம்
''இது மிகவும் கொடூரமானது; இதை ஏற்க முடியாது. கொரோனாவுக்கு ஒருவரை இழப்பது என்பது புள்ளிக்கணக்கில் மற்றொன்று என, எடுத்துக் கொள்ள முடியாது. வைரசுக்கு எதிராக, அனைவரும் இணைந்து செயல்படுவோம்.'' என, அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE