உடுமலை:உடுமலையில், முதல்வர் மற்றும் அமைச்சரை அவதுாறாக பேசிய, தி.மு.க., நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., சார்பில், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில்,திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், 54, பிரதமர், தமிழக முதல்வர் பழனிசாமி., மற்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை, ஒருமையில் தகாத வார்தைகளால் பேசினார்.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகி உதயகுமார் கொடுத்த புகாரின்படி, உடுமலை போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள ராஜமாணிக்கத்தை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE