கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் போலீசாருக்கு காசநோய் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடந்தது.
காசநோய் வார விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி பாரதி ஆக்சாலீஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் மேலுார் காசநோய் அலகிற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த போலீசாருக்கு காசநோய் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி., ராமநாதன் தலைமை தாங்கினார்.கள்ளக்குறிச்சி வட்டார முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சங்கர், கூட்டத்தில் பங்குபெற்ற 150க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காசநோய் பற்றிய அறிகுறிகள், பரிசோதனை முறைகள், மருந்து வகைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு தரும் சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கினார்.
அனைவருக்கும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE