நெய்வேலி : நெய்வேலியில் ஜெ., பிறந்த நாளையொட்டி, நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சொரத்தூர் ராஜேந்திரன் பரிசு வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டி, நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள மில்லினியம் கார்டனில் மாநில அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி நடந்தது.கடலுார், சென்னை, நீலகிரி, கோயமுத்தூர், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. குறிஞ்சிப்பாடி ஒன்றிய சேர்மன் கலையரசி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சொரத்துார் ராஜசேகர், கடலுார் சிவமணி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், தொழிலதிபர்கள் வெங்கட்ராமன், அஜீத் முன்னிலை வகித்தனர்.
கால்பந்தாட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சொரத்தூர் ராஜேந்திரன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE