விழுப்புரம், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குருமூர்த்தி, அன்பழகன், அரிதாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாராயணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில தலைவர் செல்லையா, துணை தலைவர் இந்திரா சிறப்புரையாற்றினார்.இதில், பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாட்களாக உள்ளதை கைவிட வேண்டும்.
ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE