புவனகிரி, : கீழ்புவனகிரி தொடக்க வேளாண் வங்கியில் பயனாளிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்கினர்.
கீழ் புவனகிரி தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் 520 விவசாயிகள், மூன்று கோடியே 56 லட்சத்து 15 ஆயிரத்து 411 ரூபாய் விவசாய கடன் பெற்றனர். தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ததை அடுத்து, விவசாயிகளுக்கு கடன் இல்லா சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.வங்கி செயலர் மைனர்செல்வம் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் உமாமகேஸ்வரன், புவனகிரி நகர செயலர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு வங்கித் தலைவர் சசிசெல்வராஜ் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கான கடன் இல்லா சான்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆனந்த், வாசுகி, ஆறுமுகம், சிவஞானம், சரஸ்வதி, சிவக்குமார், வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.துணைத் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE