மயிலம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கூட்டேரிப்பட்டில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழரசன், நாகராஜன், காளிதாஸ், மணி முன்னிலை வகித்தனர். பாஸ்கர் வரவேற்றார்.பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, குமார், வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE