செஞ்சி : வல்லம் வட்டார வேளாண் துறை சார்பில் அகலுார் கிராமத்தில் எலி ஒழிப்பு முகாம் நடந்தது.
இதில் வல்லம் வட்டார அட்மா திட்ட உதவி அலுவலர் ஜெய்கணேஷ் தலைமையில், கள அலுவலர் தேவதாஸ் வயல்களில் எலிகளை ஒழிப்பதற்கான செயல் விளக்கம் அளித்தார். இயற்கை விவசாய களப்பணியாளர் சுரேந்தர் இயற்கை விவசாயம் செய்யும் முறையை பற்றியும், கறவை மாடு பராமரிப்பு குறித்து விளக்கினார்.இதில் எலி, கொசு, மாடு உனிகளை ஒழிப்பதற்கான மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE