பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோட்டில் இருந்து, கல்வி மாவட்ட அலுவலகம் செல்லும் இணைப்பு ரோடு வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.கல்வி மாவட்ட அலுவலக ரோடு வழியாக, நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஆசிரியர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் சென்று வருகின்றனர். போக்குவரத்து நிறைந்த ரோட்டில், வாகன விபத்துகள் அவ்வப்போது ஏற்படுகிறது. விபத்துகளை கட்டுப்படுத்த வேக்கதடை அமைக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலக ரோடு, மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில், வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் திடீரென மோதிக்கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளி மாணவியரும் இவ்வழியாக செல்வதால், பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, ரோடு திரும்பும் இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE