உடுமலை:'கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.இது குறித்து, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது:கேரளாவில் அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம், 6வது பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அங்கு அரசுப்பள்ளிகளில் படிக்கும் தொடக்க கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம், கல்வித்தரமும் அதிகம்.ஆனால், தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் விருப்ப பாடமாகவே உள்ளது. தொடக்க வகுப்புகளுக்கு இல்லை. எனவே, தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது.தற்போது, புதிய பாடத்திட்டத்தில், அறிவியல் பாடத்தில் வெறும், 3 பக்கம் மட்டும் பெயருக்காக இணைத்துள்ளது. ஆனால், அதற்கான ஆய்வகமும், கணினியும் பெரும்பாலான தொடக்க நிலை பள்ளிகளில் இல்லை.என்.சி.இ.ஆர்.டி., விதிப்படி, ஒன்றாம் வகுப்பில் இருந்து கணினி அறிவியலை தனி பாடமாக, பிற மாநிலங்களை போல் தமிழகத்தில் வழங்க வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டுமென்பதே, எங்களின் எதிர்பார்ப்பு.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE