பொள்ளாச்சி:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் சில்வர் தட்டு வினியோகிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., பொள்ளாச்சி வடக்கு - கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சோமசுந்தரம் முன்னிலையில், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொருட்களை வழங்கினார். திருவள்ளுவர் திடல், எம்.ஜி.ஆர்.,நகர், நாகர் மைதானம், தாராபுரம் ரோடு பகுதியிலும், காளியப்பம்பாளையம், சின்னேரிபாளையம் மற்றும் ரங்கம்புதுார் பகுதியில், இரண்டாயிரம் பேருக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE