சேத்தியாத்தோப்பு : பைக்கில் மதுபாட்டில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சோழத்தரம் சப்இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார், நேற்று வலசக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். வலசக்காடு வீரன்கோவில் அருகில் பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த அப்பாதுரை மகன் முத்து, 37; விஸ்வநாதன் மகன் விஜயராஜ், 28, ஆகியோர் பைக்கில் (டி.என். 91, 1026) மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது.சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து முத்து, விஜயராஜை கைது செய்து, 90 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE