விழுப்புரம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கோர்ட் வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு ராமமூர்த்தி, சங்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அப்போது, வழக்கறிஞர்கள் தமிழரசன், சரவணன், அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE