பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கொடுத்த மனு விபரம்:பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டமானால், மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் பெருகும். சுற்றுலா, விவசாயம் உள்ளிட்டவைக்கு அதிக நிதி கிடைக்கும்.எனவே, உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களை இணைத்து மாவட்டமாக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு ஜக்கார்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீதர் கொடுத்த மனுவில், 'கோட்டூர் ரோடு, வடக்கிப்பாளையம், முள்ளுப்பாடி உள்ளிட்ட ரயில்வே மேம்பாலங்களில் இருபக்கமும் தடுப்பு கம்பிகள் அமைக்காததால், விபத்து அபாயம் உள்ளது. மேம்பாலங்களில் தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE