மயிலம் : மயிலம் ஒன்றியம் செண்டூரில் மினி குடிநீர் தொட்டி பழுதாகி காட்சிப்பொருளாக உள்ளதால் கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
மயிலம் அடுத்த செண்டூர் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு துவக்கப் பள்ளி அருகில் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது, அருகில் உள்ள பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வந்தது.இந்த குடிநீர் தொட்டியின் மின் மோட்டார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, செண்டூர் கிராமத்தில் காட்சிப் பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE