பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், குடியேறும் போராட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், பொள்ளாச்சி அமைப்பாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.சங்க நிர்வாகிகள் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. குறைந்தபட்சம், 3,000 ரூபாயாகவும்; கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.மேலும், புதிய சட்ட விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு, நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் கடந்த, பிப்., 9ம் தேதி முதல் ஈடுபட்டோம்.சமூக நலத்துறை செயலாளர் பேச்சு நடத்தியதால், ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் எவ்வித அறிவிப்பு வரவில்லை. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மீண்டும் போராட்டம் துவக்கி உள்ளோம். இவ்வாறு, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE