சின்னசேலம் : சின்னசேலம் அருகே ஊர் பொது குளம் போதிய ஆழம் இல்லாததால், தண்ணீரின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது
.சின்னசேலம் ஒன்றியம், பாண்டியன்குப்பம் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்கு கிழக்கு பகுதியில், பொதுவான தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் சீரமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆனதால், தற்போது துார்ந்து குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கனமழை பெய்த போதும், இந்த குளத்திற்கு தண்ணீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், மழை காலங்களிலும் கூட வறண்ட நிலையிலே காணப்படுகிறது.
இதனால் சுற்று வட்டார பகுதி விளை நிலங்களிலுள்ள கிணறுகளின் நீர் மட்டம், தற்போது குறைய தொடங்கியுள்ளது.எனவே, ஊருக்கு பொதுவாக உள்ள இந்த குளத்தை துார் வாரி, தண்ணீர் வரத்து வசதியை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE