ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மயான பூஜை இன்று நள்ளிரவு நடக்கிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, கடந்த, 11ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. வரும், 27ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மயான பூஜை இன்று, 24ம் தேதி நள்ளிரவு, 12:00 மணிக்கு ஆழியாறு ஆற்றுப்படுகையில் நடக்கிறது. இந்த நிகழ்வை காண, பெண், ஆண் பக்தர்களுக்கு தனித்தனியாக பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.போலீசார் கூறுகையில், 'மயான பூஜைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள், அரசு சிறப்பு பஸ்கள் நிறுத்த, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆனைமலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, வி.ஆர்.டி., பெண்கள் அரசுப்பள்ளியில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE