திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கபிலர் நினைவு துாண் அமைக்கும் பணியை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார், வீரட்டானேஸ்வரர் கோவில் வடபுறத்தில், கபிலர் குன்று அருகே, தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய பகுதியில், கபிலர் நினைவுத் துாண் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன் நேரில் ஆய்வு செய்தார்.பணியை விரைந்து முடிக்கவும், சிறப்பாக மேற்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது பேராசிரியர் செல்வகுமார், கோவல் தமிழ் சங்கத் தலைவர் ஊதியன், சன்மார்க்க சங்க நிறுவனர் சீனிவாசன், தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு உதவியாளர் விஜய், பணியாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE