திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடந்தது.
பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் வலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டிக்கும் வகையில், திருக்கோவிலுார் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில், கண்டன சைக்கிள் பேரணி நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர்குணா, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.கட்சி நிர்வாகிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
தொ.மு.ச., நிர்வாகிகள் சரவணன், சண்முகம், முன்னாள் நகர கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், பிரகாஷ், நகர,ஒன்றிய நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், மகேஷ், ராம், விஜய், ராகவன், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE